Tuesday, September 27, 2011
பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது? - ஏன்?
>
> பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:
>
> பீஜே அவர்கள் தங்கள் குர்ஆன் தமிழாக்கத்தில் "4. முன்னர் அருளப்பட்டது என்ற
> தலைப்பின் கீழ்" பக்கம் 1086ல் குர்ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை
> எழுதியுள்ளார்: *"திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு
> வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்".*
>
> இந்த தற்போதையை எங்கள் கட்டுரை பீஜே அவர்களின் வரிகளை அலசுகிறது அல்லது
> குர்ஆன் முழுமையானது அல்ல என்பதை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு
> வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட வரிகளை படித்தவர்கள், இந்த கட்டுரையையும்
> முழுவதுமாக படிக்க வேண்டுகிறோம்.
> குர்ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று
> கருதமுடியாது? - ஏன்? Why the Quran cannot be considered completely
> preserved and inspired ஆசிரியர்: கொர்நெலியு
>
> அன்பான இஸ்லாமிய நண்பனுக்கு,
>
> நம்முடைய சமகால இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக்
> குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன, அவைகள்:
>
> 1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்ஆன் தான் இன்று அவர்களிடம் எழுத்துக்கு
> எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.
>
>
> 2. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.
>
> மேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக
> அறியலாம்
>
> "பரிசுத்த குர்ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய
> நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த
> அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை
> கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்ஆனிலிருந்து ஒரு
> எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்ஆன் கூறுவது போல இதற்கு
> இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9)
> [1]<http://answering-islam.org/authors/cornelius/complete_inspired.html#fn_1>
>
> "இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக
> அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்ஆனை
> மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை
> அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு
> வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப்
> படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்
> காபிரியேல் தூதன் மூலமாக குர்ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி
> ஆண்டில் குர்ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி
> பார்த்துக்கொண்டார்கள். குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று
> வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்,
> எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர்
> முழு குர்ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள்.
> நூற்றாண்டுகளாக குர்ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது.
> [2]<http://answering-islam.org/authors/cornelius/complete_inspired.html#fn_2>
>
> இஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்ஆனிலிருந்தே வந்துள்ளது:
>
> *1. குர்ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்ஆன் 15:9ம் வசனத்தில்
> காணலாம்:*
>
> நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்ஆன் 15:9 -
> பீஜே தமிழாக்கம்)
>
> *2. குர்ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும்
> உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின்
> கூற்றுப்படி, குர்ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்ஆனே ஆகும்.*
>
> நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு,
> (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக்
> கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக்
> கொள்ளுங்கள்! (குர்ஆன் 2:23 - பீஜே தமிழாக்கம்)
>
> முழு குர்ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான
> கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்ஆனின் ஒரு "வசனத்தை" அல்லது "ஆயத்"ஐ
> மறுத்தால்,குர்ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக்
> கொள்வார்.
>
> (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு
> முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்
> வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு
> உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின்
> வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்;
> தண்டிப்பவன். (குர்ஆன் 3:3,4 - பீஜே தமிழாக்கம்)
>
> மேற்கண்ட வசனங்களில் "வெளிப்படுத்தினான்/அருளினான்" என்பது "பையதி
> (بِـَٔايَـٰتِ)" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம்
> "அல்லாஹ்வின் வசனங்களில்" என்று புரிந்துக்கொள்ள முடியும்.
>
> குர்ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை
> கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்ஆனின் ஒரு
> சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்ஆன் அத்தியாயங்களை
> (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.
>
> தற்காலத்தில் நம்மிடமுள்ள குர்ஆனை விட வித்தியாசமான ஒரு குர்ஆனை (தொகுப்பை)
> உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள்
> அறிந்த விஷயமாகும். தற்கால குர்ஆன் "ஸைத் இப்னு ஸாபித்" என்வரின்
> தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்ஆன்களுக்கு இடையே
> இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால்,
> உபையின் குர்ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன
> என்பதாகும், அவைகள் அல்-ஹப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும்.
> (இதைப் பற்றி மேலும் அறிய "அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்ஆன்"
> என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும்
> "ஜம் அல்-குர்ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78<http://www.answering-islam.org/Gilchrist/Jam/chap3.html#p72>".
> தற்கால குர்ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத்
> அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்<http://isakoran.blogspot.com/2011/09/114-116.html>)
>
>
> இந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி
> ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில்
> உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்ஆன்
> தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்ஆன் தொகுப்பில்
> இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட
> விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.
>
> பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005
>
> உமர்(ரலி) கூறினார்
>
> எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள்
> உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள்,
> 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்'
> என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, 'எந்த ஒரு வசனத்தையாவது நாம்
> மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த,
> அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.
>
> என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source<http://chittarkottai.com/bukhari/tamil/tesearch.php>
>
> உபை இப்னு கஅப் என்பவரின் குர்ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள்
> புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல.
> இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக
> பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:
>
> *1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர்
> கூறியதிலிருந்து* , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்ஆனின் ஒரு
> பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.
>
> *2. இந்த இரண்டு ஸூராக்கள் "தொலைந்துவிட்டன" அல்லது "மறக்கப்பட்டுவிட்டன"
> என்று யாரும் கூறமுடியாது* . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர
> நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத்
> என்பவரின் குர்ஆன் தொகுப்பை அதிகார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம்
> படுத்தியதற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத
> குர்ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு
> வரை, உபை என்பவரின் குர்ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக
> கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேகர் உபையின் அந்த
> இரண்டு குர்ஆன் அத்தியாயங்களை அறிந்துவைத்துள்ளனர். இந்த இரண்டு
> அத்தியாயங்கள் தொலைந்துப் போகவில்லை, அவைகள் இஸ்லாமிய தலைவர்களால்
> "ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளன". குர்ஆன் 3:3-4 என்ற வசனங்களின் படி,
> இந்த இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் மீதும், அவர்களின் சொற்களை கேட்டு
> நடக்கும் இதர இஸ்லாமியர்கள் மீதும் மிகப்பெரிய தண்டனையை
> வருவித்துக்கொண்டு உள்ளார்கள்.
>
> *3. அந்த இரண்டு குர்ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து
> செய்யப்படவில்லை* , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும்
> இவரின் குர்ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர்
> போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.
>
> *4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்ஆன் வசனங்களுக்கு இணையாக
> அல்லது அவைகளை* விட சிறப்பான வேறு குர்ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார்
> என்று குர்ஆன் உறுதியளிக்கிறது (குர்ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து
> எப்படி செய்யமுடியும்? அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின்
> மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்?
>
> *5. உபையின் குர்ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில்
> மட்டுமே காணப்பட்டு* இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி
> ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று "குஸைமா இப்னு ஸாபித் அல்
> அன்சாரீ" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்ஆன் பகுதியை ஸைத் மற்றும்
> அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510).
> உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ"
> என்பவரை விட உயர்ந்ததாகும்.
>
> அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
>
> ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக்
> காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி),
> அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து
> வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை
> பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு)
> முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு
> அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம்,
> 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது
> போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு
> கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர்
> அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி)
> அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து
> அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து
> விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
>
> எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம்
> கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு
> ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி
> ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி)
> உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான
> மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில்
> ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின்
> (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின்
> மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே
> செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல
> பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி)
> அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த
> பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல்
> (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி
> உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
>
> நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள்
> ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று
> (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல்
> அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: "அல்லாஹ்விடம்
> தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும்
> இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய
> வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை
> நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்".
> (திருக்குர்ஆன் 33:23)
>
> எந்த ஒரு இஸ்லாமியராவது, "உபையின் குர்ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான
> அத்தியாயங்கள், குர்ஆனுடையது இல்லை" என்று சொல்வாரானால், குர்ஆன்
> இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்ஆனில்
> இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன
> ஆனால் அவைகள் இன்றைய குர்ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.
>
> குர்ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்ஆனை
> "உபையிடம்" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் "உபை
> இப்னு கஅப்" என்பவராவார். குர்ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த
> இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் "உபை இப்னு கஅப் என்ற
> சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது".
>
> சஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்
>
> நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை
> ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள்.
> உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள்.
> நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்' என்று
> கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.
>
> உபை இப்னு கஅப் என்பவரின் குர்ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள்
> குர்ஆனின் இதர ஸூராக்கள் போல் காணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும்
> அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம்
> உருவாக்க முடியுமா?
>
> சஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் "குர்ஆனை ஓதுபவர்களில்
> சிறந்தவர்" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக்
> கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்ஆன்<http://www.answering-islam.org/Gilchrist/Jam/chap3.html#p67>"
> என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து
> இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர்
> தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது "உபையை" குர்ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர்
> என்று கூறுகிறார்.
>
> அஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, ... அனஸ் இப்னு மாலிக் என்பவரின்
> அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி
> உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, "இறைத்தூதர் கூறினார்: என் மக்களில்
> மிகவும் சிறப்பாக குர்ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்" (இப்னு ஸைத்,
> கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)
>
> முஹம்மதுவும் உமரும் "குர்ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று
> புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்ஆனை ஓதத்தெரியும்" என்று
> யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று
> கூறுகிறார்கள் என்று பொருள்.
>
> இந்த இரண்டு ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு
> உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று
> உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம்
> விளைந்துவிடும், கடைசியாக, குர்ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும்
> சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்ஆனி பாகமில்லை என்று
> கூறவில்லை.
> இப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.
>
> *முதலாவதாக,* ஸைத் என்பவரின் குர்ஆன் முழுமையற்றது என்று ஒதுக்கிவிட்டு,
> உபையின் குர்ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய
> குர்ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்ஆனை
> புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து
> வேதனையான தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள்
> வரை குர்ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய
> அறிஞர்களுக்கு குர்ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும்,
> அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும்
> மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய
> அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக
> இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய
> பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.
>
> *இரண்டாவதாக,* இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்ஆனை
> நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு
> இறைத்தன்மையல்ல என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்ஆன்
> அத்தியாயங்கள் "குர்ஆனைப் போலவே" இருப்பதினால், குர்ஆனை ஓதுபவர்களில்
> சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள்
> இருந்துள்ளது. குர்ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி
> உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.
>
> *மூன்றாவதாக,* ஸைத் உடைய குர்ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை
> உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி
> நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும்
> "உபையை விட சிறப்பாக குர்ஆனை ஓதுபவர்கள்" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன்
> பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை
> குத்திவிடுகின்றீர்கள். இப்படி "முஹம்மது பொய்யர்" என்ற முத்திரையை
> குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற
> நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு
> செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள் .
>
> குர்ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய
> நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது
> ஆரம்பத்திலிருந்தே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.
> குர்ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய்
> இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது
> முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்ஆன் பகுதிகளுக்கு பதிலாக
> வேறு குர்ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு
> பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்ஆன்
> வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற
> வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு "கைரு அல் மகீரீன்"
> (வஞ்சிப்பதில் சிறந்தவர்) என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்ஆன் 3:54
> மற்றும் 8:30). அல்லாஹ்வின் வஞ்சனையிலிருந்து (மக்ரா) நீங்கள் தப்பிக்கவே
> முடியாது (குர்ஆன் 7:99). தோராவின் மற்றும் நற்செய்தியின்
> இறைவனிடத்திற்கும், பொய் சொல்லாத இறைவனிடத்திற்கும் திரும்புங்கள்.
>
> அன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும்
> தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு
> உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் "* வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!
> நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல்
> தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல்
> ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள்
> ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்*" (மத்தேயு 11:28,29). மறுபடியும்
> அவர் இவ்விதமாக கூறுகிறார் "*பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும்
> என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை* "
> (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.
> ------------------------------
>
> பின் குறிப்புகள்:
>
> 1 The Miracles of the Prophet Muhammad, p. vi of the introduction to The
> Translation of the Meanings of Sahih Al-Bukhari, Vol. I, by Dr. Muhammad
> Muhsin Khan. Published by Dar AHYA Us-Sunnah Al Nabawiya.
>
> 2 A Brief Illustrated Guide To Understanding Islam by I. A. Ibrahim, Second
> Edition. Published by Darussalam Publishers and Distributors P.O. Box 22743,
> Riyadh 11416 K. S. A., p. 5; also available in the U.S.A. from Darussalam
> Houston P.0. Box 79194, Houston, Tx 77279.
>
> கொர்நெலியு அவர்களின் கட்டுரைகள்
>
> ஆங்கில மூலம்:
> http://www.answering-islam.org/authors/cornelius/complete_inspired.html
>
>
>
>
>
> --
> 9/21/2011 11:23:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran<http://isakoran.blogspot.com/2011/09/blog-post_21.html>இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
குர்ஆனின் இன்னொரு இலக்கண பிழை - "நாங்கள் இறைத்தூதர் தான்"
இறைத்தூதர் தான்" ஆசிரியர்கள்: அந்தோனி ரோகர்ஸ் & சாம் ஷமான்
தான் ஒரு இறைத்தூதர் என்றும், தீர்க்கதரிசி என்றும், அல்லாஹ்வின் அப்போஸ்தலர்
என்றும் சுயபிரகடனம் செய்துக்கொண்ட முஹம்மதுவின் நபித்துவத்திற்கு
கொடுக்கப்பட்ட ஒரே அற்புதம் "குர்ஆன்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள்
சொல்வதை அனைவரும் அறிவோம். "குர்ஆன் எந்த ஒரு பிழைக்கும் அப்பாற்பட்டது, எந்த
ஒரு இலக்கண பிழைக்கும் அப்பாற்பட்டது" என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்,
இதனால் தான் மேற்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இந்த கட்டுரைகளை
(1<http://www.answering-islam.org/Quran/Miracle/not_so_eloquent.html>,
2 <http://www.answering-islam.org/BehindVeil/btv8.html>,
3<http://www.answering-islam.org/Authors/Newton/grammar.html>,
4 <http://www.answering-islam.org/Responses/Naik/quranclaims2.htm>,
5<http://www.answering-islam.org/Responses/Menj/bravo_r2c.htm>,
6 <http://www.answering-islam.org/Authors/Newton/wail.html>) நாம்
படிப்போமானால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் பொய்யானாது என்பது விளங்கும்.
இதன் வரிசையில் குர்ஆன் 26:16ம் வசனத்தில் இன்னொரு இலக்கண பிழையை நாம்
காணலாம்.
முதலில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மற்றும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட
தமிழாக்கங்களிலிருந்து இவ்வசத்தை காண்போம்.
குர்ஆன் 26:16
ஃபிர்அவ்னிடம் சென்று "*நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம்* ....."
(பீஜே தமிழாக்கம்)
குர்ஆன் 26:16
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர் அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்:
"*நிச்சயமாக
நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள் ..."* . (முஹம்மது ஜான்
டிரஸ்ட் வெளியீடு தமிழாக்கம்)
இந்த வசனத்தை இஸ்லாமியர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அனேக ஆங்கில
மொழியாக்கங்களிலிருந்து படிக்கலாம்.
And both of you approach Pharaoh and say: *We are the Messengers* of the
Lord of the worlds, - Dr. Laleh Bakhtiar
Go to Pharaoh, both of you, and say, *We are messengers* from the Lord of
the Worlds: - Wahiduddin Khan
Go to Pharaoh and say: "* We are messengers* from the Lord of the Universe.
– T. B. Irving
"So both of you go to Pharaoh and Say: "* We are messengers* of the Lord of
the worlds" – Progressive Muslims
So go ye twain unto Fir'awn and say: verily *we are the apostles* of the
Lord of the Worlds, - Abdul Majid Daryabadi
So approach Pharaoh and say, ''* We are indeed envoys* of the Lord of the
worlds – Ali Quli Qarai
They came to the Pharaoh and said, "* We are the Messengers* of the Lord of
the Universe. – Muhammad Sarwar
So go, both of you, to Pharaoh and say, '* We both are messengers* of the
Lord of all the worlds, - Muhammad Taqi Usmani
Go together to Pharaoh and say, "* We are Messengers* from the Lord of the
Worlds." – Shabir Ahmed
"So both of you, go forth to Firon (Pharaoh), and say: '* We are the
messengers* of the Lord (and Cherisher) of the Worlds (Rab-ul-'Ala'meen); -
Syed Vickar Ahamed
Go to Pharaoh and say, '* We are the messengers* of the Lord of the worlds,
- Umm Muhammad (Sahih International)
Go to Pharoah and tell him: "* We are the Messengers* from the Lord of the
Worlds. – Farook Malik
So go to the pharaoh and say, "* We are the messengers* of the Lord of the
entire universe." – Dr. Munir Munshey
So go both of you to Pharaoh and say: *We are the Messengers* (sent) by the
Lord of all the worlds. – Tahir-ul-Qadri Mohammed
"Therefore approach Firaun then proclaim, '* We both are Noble
Messengers*of the Lord Of The Creation.' – Faridul Haque
"Go to Pharaoh and say, `* We are messengers* from the Lord of the
universe.' – Rashad Khalifa
`So go to Pharaoh and say, `* We are the Messengers* of the Lord of the
Worlds – Sher Ali
"And when you both come to Firaun (Pharaoh), say: *We are the Messengers* of
the Lord of the Alameen (mankind, jinns and all that exists), - Hilali &
Khan
மேலே உள்ள ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது அவைகள் இலக்கணப்படி சரியாக
இருப்பது போல் காணப்படுகிறது. ஆனால், இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த
ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது, இந்த மொழியாக்கம் செய்பவர்கள் ஏதோ ஒன்றை
நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது இன்னுமுள்ள
இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை கீழே காண்போம்.
And go, both of you, unto Pharaoh and say, 'Behold, *we bear a message* from
the Sustainer of all the worlds: - Muhammad Asad
And come together unto Pharaoh and say: Lo! *we bear a message* of the Lord
of the Worlds, - M. M. Pickthall
Go, both of you, to Pharaoh and say, "*We bring a message* from the Lord of
the Worlds: - Abdel Haleem
"So go, both of you, to the Pharaoh and say: '*We have come with a
message*from the Lord of the worlds (He Who has created and sustains
everything): -
Ali Unal
"And go to Pharaoh and say, ´Verily, *we bear a message* from the Lord of
the Worlds - (v. 17) Hamid S. Aziz
Go to the Pharaoh and tell him: *'We bring a message* from the Lord of all
the worlds – Muhammad Ahmed Samira
இப்போது நாம் மேலே கண்ட ஆங்கில மொழியாக்கங்களை பார்க்கும் போதும் இலக்கணப்படி
அவைகள் சரியானதாக இருக்கிறது. ஆனால், இவர்களோடு நாம் முதலில் பதித்த ஆங்கில
மொழியாக்கங்களை ஒப்பிட்டால் இரண்டு வித்தியாசங்களைக் காணலாம். அதாவது
இரண்டாவதாக நாம் கண்ட மொழியாக்கத்தில் "தூதர்கள்" என்ற பெயர்ச்சொல்லை "தூது"
என்று மாற்றியுள்ளார்கள். மற்றும் இரண்டாவது மாற்றம் என்னவென்றால், "பன்மையை"
ஒருமையாக மாற்றியுள்ளார்கள் ("தூதர்கள் என்பதற்கு பதிலாக தூது" என்று ஒருமையாக
மாற்றியுள்ளார்கள்).
மேலும், குர்ஆனை மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்களில் இன்னொரு குழுவும் உள்ளது,
இவர்களும் குர்ஆன் வசனத்தை சரியான இலக்கணத்தோடு மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
ஆனால், இவர்கள் இன்னொரு மாற்றத்தையும் செய்துள்ளார்கள், அதாவது மேலே கண்ட
முதலாவது குழு மற்றும் இரண்டாவது குழு செய்த மாற்றங்களை ஒன்றாக கலந்து இவர்கள்
மொழியாக்கம் செய்துள்ளார்கள். இப்படி இவர்கள் எல்லாரும் செய்வதினால், இந்த
வசனத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்று நாம் ஆச்சரியத்தோடு கேள்வி
கேட்கும் படி உள்ளது மற்றும் யார் மூல குர்ஆனுக்கு இணையான மொழியாக்கத்தை
செய்கிறார்கள் என்று நம்மை தேட வைக்கிறது. இந்த மூன்றாவது குழுவின்
மொழியாக்கத்தை கீழே காண்போம்.
"And so, both of you go to Pharaoh and say to him:" "*We are bearers
of the divine
message* sent by Allah, Creator of the worlds, the visible and the
invisible, past, present and those to come", - Al-Muntakhab
`Go to Pharaoh both of you and say, "*We are bearers of a Message* from the
Lord of the worlds. – Ahamtul Rahman Omar
Then come to Pharaoh, and say: *We are bearers of a message* of the Lord of
the worlds: - Maulana Muhammad Ali
கடைசியாக, இன்னொரு குழுவும் இருக்கிறது, இவர்கள் செய்த ஆங்கில மொழியாக்கம்
உண்மையிலேயே அந்த வசனத்தில் உள்ள பிரச்சனையை நமக்கு காட்டுகிறது. ஏன் மேலே
கண்டவர்கள் பல வகையாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்? என்பது இப்போது புரிய
ஆரம்பிக்கிறது. இப்போது இந்த குழு செய்த மொழியாக்கத்தைப் படிப்போம்:
Go to Pharaoh and say, "*We are the Messenger* of the Lord of all the worlds
– Aisha Bewley
So come up to Firaawn, then say (to him), "*We (both) are the Messenger* of
The Lord of the worlds; - Muhammad Mahmoud Ghali
When you see Pharaoh, tell him: "*We are the Lord's **Messenger *for all His
intelligent beings." – Bijan Moeinian
go both to Pharaoh and both of you say to him: *'We are (each) a
Messenger*from the Lord of all the Worlds. – Hasan Al-Fatih Qaribullah
ஜியார்ஜ் சேல் என்ற இந்த இஸ்லாமியரல்லாதவர் இவ்வசனத்தை கீழ்கண்ட விதமாக
மொழியாக்கம் செய்கிறார்.
Go ye therefore unto Pharaoh, and say, verily *we are the apostle* of the
Lord of all creatures:
நாம் காண்பது போல, கடைசியாக மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம்
இலக்கணத்தின் படி தவறான ஒன்றாகும். இந்த இலக்கண பிழையை சரி செய்ய ஹசன் அல்பதி
கரிபுல்லாஹ் என்பவர் அடைப்பு குறிக்குள் "*ஒவ்வொருவரும் (each) *" என்ற
வார்த்தையை சேர்த்து, அந்த இலக்கண பிழையை சரி செய்துள்ளார்.
இந்த விடுகதைக்கு பதில் (இதனை நாம் பதில் என்று அழைக்க விரும்பினால்), நாம்
இந்த வசனத்தின் அரபி மூலத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
Transliteration:
*Fatiya* firAAawna fa-*qoola inna* *rasoolu* rabbi alAAalameena
*ஃபதிய* ஃபிர்அவ்ன ஃப-*கூல இன்ன* *ரசூலு* ரப்பி அல்ஆலமீன
மேலேயுள்ள வசனத்தில், "ஃபதிய" மற்றும் "கூல" என்ற வினைச்சொற்கள், "இருமை(dual
form)" வடிவில் உள்ளது, ஆகையால் அது இருவரை குறிப்பிடுகிறது. ஆனால், "இன்ன"
என்றச் சொல்லானது "பன்மையில்" உள்ளது. இந்த இடத்தில் இருமையை பயன்படுத்துவது
சரியான ஒன்றாகும், ஏனென்றால், மோசே மற்றும் ஆரோன் என்ற இருவரையும் இது
குறிப்பிடுகிறது, பார்வோனிடம் சென்று இஸ்ரவேலர்களை அனுப்பிவிடும்படி கேட்கும்
படி இவ்விருவரும் கட்டளையிடப்படுகிறார்கள்.
ஆனால், "தூதர்" என்ற வார்த்தை, அரபியில் "ரசூலு" என்று இவ்வசனத்தில் வருகிறது,
இந்த வார்த்தை ஒரு பெயர்ச்சொல்லாகும் மற்றும் ஆண்பாலாகும். மட்டுமல்ல, இது
"ஒருமையில்" கூறப்பட்டுள்ளது. ரசூலு என்ற வார்த்தை மோசே மற்றும் ஆரோன்
இருவருக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்டு இருந்த போதிலும், இது "ஒருமையில்"
கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தை நாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்தால், இந்த
மூல அரபி வசனத்தில் உள்ள இலக்கண பிழை தெரியவரும், இதனை கீழ்கண்ட வாறு
மொழியாக்கம் செய்யவேண்டும்.
*Both of you* go to Pharaoh and *both of you* say: "*We* are *the
messenger*of the Lord of the worlds."
*நீங்கள் இருவரும்* பார்வோனிடம் செல்லுங்கள், மற்றும் *நீங்கள்
இருவரும்*கூறுங்கள் "
*நாங்கள் *அகிலத்தை படைத்த இறைவனின் *தூதர்* ".
"ரசூலு" என்ற வார்த்தைக்கு பதிலாக "ரசூல" என்று "இருமை வடிவில்" (dual form)
மாற்றியிருந்தால், இந்த இலக்கண பிழை வந்திருக்காது. இப்படி இருந்தபோதிலும்,
வேறு ஒரு இடத்தில் இந்த வார்த்தைகளை குர்ஆன் சரியாகச் பயன்படுத்தியுள்ளது
மற்றும் இந்த வசனமும் மோசே மற்றும் ஆரோனை பார்வோனிடம் அனுப்புவது பற்றியே
பேசுகிறது.
"ஆகவே, *நீங்கள் இருவரும்* அவனிடம் சென்று: '*நாங்களிருவரும்* உன்னுடைய
இறைவனின் *தூதர்கள்* , பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும்
அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை
உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப்
பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்"
(என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47 முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)
`So go *ye both* to him and *say*, `*We* are *the Messengers* of thy Lord;
so let the Children of Israel go with us; and torment them not. We have,
indeed, brought thee a great Sign from thy Lord; and peace shall be on him
who follows the guidance; S. 20:47, Sher Ali
Transliteration:
*Fatiyahu* fa-*qoola* *inna* *rasoola* rabbika ...
*ஃபதியஹு* ஃப-*கூல இன்ன* *ரசூல* ரப்பிக ….
மேற்கண்ட விவரங்களோடு இந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டது: பல மொழிப்
பெயர்ப்பாளர்களின் மொழியாக்கங்களில் நிலவிய வித்தியாசங்கள் மற்றும்
குழப்பங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்றால், அரபி மூல குர்ஆனின் வசனத்தில்
நிலவிய இலக்கண பிழையாகும். இதனை சரி செய்வதற்கு அல்லது இலக்கண பிழையை மூடி
மறைப்பதற்கு இஸ்லாமியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் அனேக
வித்தியாசங்களோடு கூடிய மொழியாக்கங்கள். மூல அரபி குர்ஆனில் உள்ளது போல
மொழியாக்கம் செய்தால், அது இலக்கண பிழையோடு அமைந்துவிடும், ஏனென்றால்
மூலத்திலேயே இலக்கண பிழை இருக்கிறது. ஒரு அறைகுறையாக படித்த ஒரு நபரிடம் நாம்
எதிர்ப்பார்க்க முடிந்ததெல்லாம் இப்படிப்பட்ட பிழையுள்ள ஒரு வெளிப்பாடுகளாகத்
தானே இருக்கமுடியும். சர்வஞானம் படைத்த இறைவனின் நேரடி பேச்சை இப்படிப்பட்ட ஒரு
அறைகுறை மனிதனிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?
மேலும் அறிய படிக்கவும்:
குர்ஆன் மொழியாக்கங்களில் பொதிந்துள்ள மூல குர்ஆனின்
குழப்பங்கள்.<http://www.answering-islam.org/Quran/Versions/index.html>
அந்தோனி ரோகர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
ஆங்கில மூலம்: "Don't Shoot Us, We Are Just the Messenger" - Another
Grammatical Mistake in the
Qur'an<http://answering-islam.org/authors/rogers/we_the_messenger.html>
--
9/17/2011 07:42:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa
Koran<http://isakoran.blogspot.com/2011/09/blog-post.html>இல் Isa
Koran ஆல் இடுகையிடப்பட்டது
Tuesday, September 20, 2011
குர்ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?
சூரா ஹப்த் மற்றும் க்ஹல்
உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்
Surata al-Hafd and al-Khal'(from Ubayy ibn Ka`b's Qur'an codex)
குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய "உபை இப்னு கஅப் " என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.
இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.

Surat al-Hafd
and to You (alone) we pray and lie prostrate,
and to You (alone) we proceed and have descendants.
We fear Your torture and hope for Your mercy.
Truly Your torture will overtake the infidels.
உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்

Surat al-Hafd
We speak appreciatingly of Your goodness.
Never do we disbelieve You.
We repudiate and disbelieve anyone who follows immorality.
ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம்
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.
மூலம்: 1) THE CODICES OF IBN MAS'UD AND UBAYY IBN KA'B 2) Surata al-Hafd and al-Khal'
மூல குர்ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:
குர்ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.
1. Evidence of Change Before 'Uthman
உஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்
ஏன் உஸ்மான் மற்ற குர்ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார்? இதர குர்ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார்? இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை? உஸ்மான் தொகுத்த குர்ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது?
- Jam' Al-Qur'an Chapter 1 - The Initial Collection of the Qur'an Text
- Jam' Al-Qur'an Chapter 2 - The Uthmanic Recension of the Qur'an
- Jam' Al-Qur'an Chapter 3 - The Codices of ibn Mas`ud and Ubayy ibn Ka`b
- from the Hadiths part 2 - the first collection of the Qur'an
- from the Hadiths part 3 - Differences before the 'Uthmanic collection
- from the Hadiths part 4 - the 'Uthmanic collection
- Relation of Shi'a Theology to the Qur'an
- A variant from Ubayy's Codex (as documented by Yusuf Ali)
- A Contradiction Regarding Muhammad's Fatherhood
- Distortion in the Qur'an
- A Contribution of Uthman to the Qur'an
- Uthman's standardising of the Qur'an
- 'Uthman and the Recension of the Koran
2. Evidence of Change After 'Uthman
உஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்
- Jam' Al-Qur'an Chapter 5 - The Seven Different Readings
- Jam' Al-Qur'an Chapter 6 - The Compilation of the Qur'an in Perspective
- Al-Hajjaj changed Uthman's Qur'an text and a response(?): Part 1, Part 2
3. Hadiths which say the Qur'an is incomplete
குர்ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்
குர்ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.
- Jam' Al-Qur'an Chapter 4 - The Missing Passages of the Qur'an
- Variant Readings of the Quran
- Islam and Stoning: A Case Study Into the Textual Corruption Of the Quran
- from the Hadiths part 6 - The status of the mushaf
- Sura 2:238 is not complete according to Aisha
Some Muslims are of the conviction spurious verses have been added:
4. Hadiths which refer to lost suras
தொலைந்துப்போன குர்ஆன் அத்தியாயங்கள்
தற்போதையை குர்ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.
- Jam' Al-Qur'an Chapter 4 - The Missing Passages of the Qur'an
- from the Hadiths part 5.1 - Missing Verses
- On the Integrity of the Qur'an (2) Describes Hadiths concerning the sura about 'The Valley of Riches'
- The Verse on Suckling
- The Verse on Stoning
- 'Verse' in the "Comparative Index to Islam" describes several missing verses.
5. Variants which exist in present-day manuscripts
நம்மிடமுள்ள குர்ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்
குர்ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
- A Perfect Qur'an? contains a detailed analysis of the Samarqand manuscript
- About some recent manuscript findings (in the loft of the old Great Mosque of Sana'a, in Yemen) and further discussion about them: 1
- The Different Arabic Versions of the Qur'an
- A (small) list of differences between the Warsh and Hafs readings of the Qur'an
(தமிழ் கட்டுரை : வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்) - Studies in Two Transmissions Of The Qur'an by Adrian A Brockett (off site)
- The Fifteenth Qira'at: The Abdullah Yusuf Ali Reading of the Qur'an
- Text Unchanged, Texts Unchanging? discusses the work of Arthur Jeffery (offsite).
- Relation of Shi'a Theology to the Qur'an
- A Variant Text of the Fatiha
- The Orthography of the Samarqand Codex
- On the Integrity of the Qur'an (1) - Muslim writers admit there exist variants in the Qur'an.
- Differences in the Hafs and Warsh texts
- Some textual variants in Sura 19
- Jam' Al-Qur'an Chapter 7 - The Early Surviving Qur'an Manuscripts
- from the Hadiths part 5.2 - Variant Verses
- Shi'ah Additions To The Koran
- Are the "Shia" suras al-Nurain and al-Wilaya genuine?
- Variant Readings in the Qur'an and the Bible
- Leaves from two ancient MSS. of the Coran
--
9/13/2011 11:52:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
குர்ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்
குர்ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்
முன்னுரை: பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆன் பற்றி கூறும் போது, "குர்ஆன் ஒரு அற்புதம், அரபி இலக்கிய நூல்களில் குர்ஆன் போன்றதொரு புத்தகம் இல்லை" என்பார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, குர்ஆன் போன்ற ஒரு புத்தகம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றும், குர்ஆனின் ஒவ்வொரு வசனமும், வார்த்தையும் எழுத்தும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் ஒரு பிழையையும் நாம் காணமுடியாது என்று பலவாறு கூறுவார்கள்.
இவைகளை கேட்கின்ற பாமர இஸ்லாமியர்கள் பெருமிதம் கொள்வார்கள், அதே சமயத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் "அப்படியா" என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உண்மையா? குர்ஆன் மாற்றப்படாமல் அப்படியே உள்ளதா? குர்ஆனில் பிழைகள் எதுவும் இல்லையா? என்று நாம் கேட்டு, சிறிது நேரம் எடுத்து ஆராயும் போது, பீஜே போன்றவர்கள் சொல்வது உண்மையல்ல, அவைகள் பொய்கள் என்பது புரியும்.
சரி, இந்த தற்போதைய கட்டுரையில், இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆனில் உள்ள பிழைகளை எப்படி திருத்துகிறார்கள் அல்லது சரி செய்ய முயற்சி எடுக்கிறார்கள் என்பதை "குர்ஆன் 35ம் அதிகாரம், 8ம் வசனத்தைக் கொண்டு" நாம் பார்க்கலாம்.
1) குர்ஆனை தமிழாக்கம் செய்யும் போது, மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுகள்:
குர்ஆனை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது, வசனத்தின் பொருள் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக, மொழியாக்கம் செய்பவர்கள் அல்லது தமிழாக்கம் செய்பவர்கள், வசனங்களின் மத்தியில் சில அடைப்புக்குறிகள் "()" இட்டு, அதில் சில சொந்த வார்த்தைகளை எழுதுவார்கள், இதனால் தமிழில் நாம் குர்ஆன் வசனத்தை படிக்கும் போது, பொருள் விளங்கும். இப்படி செய்வது தவறு அல்ல. இப்படி அடைப்புகுறிகள் கொடுத்து விளக்குவது வசனங்களின் பொருளை சரியாக உணர உதவும்.
ஆனால், இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால், "அல்லாஹ் ஒரு வாக்கியத்தை சரியாக முடிக்காமல், அதாவது பாதியிலேயே அந்த வாக்கியத்தை அறைகுறையாக விட்டுவிட்டு, அடுத்த வாக்கியத்திற்குச் சென்றுள்ளார்" என்பதாகும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய மொழியாக்கம் செய்பவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைக் காண்போம்.
2) குர்ஆன் 35:8ம் வசனம் பீஜே தமிழாக்கத்திலிருந்து:
இந்த குர்ஆன் வசனத்தை நாம் அனேக (ஒன்பது) தமிழாக்கங்களில் படிக்கப்போகிறோம். அதற்கு முன்பாக பீஜே அவர்கள் எப்படி இந்த வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.
குர்ஆன் 35:8
யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)
மேற்கண்ட வசனத்தை நாம் மூன்றாக பிரிக்கலாம்:
1) யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)?
2) தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான்.
3) (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்
மேலே நாம் காண்பது போல, முதல் வாக்கியம் ஒரு கேள்வியாக உள்ளது, அதாவது ஒரு மனிதன் தான் செய்யும் தீய செயல்கள் நல்லவைகளாக காண்கிறானோ, அவன் எப்படி ஒரு சொர்க்கவாசியாக இருக்கமுடியும்? என்பது போல கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகம், அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுகிறார், எப்படி வழி கேட்டில் விடுகிறார் என்பதைச் சொல்கிறது. மூன்றாவதாக, முஹம்மதுவிற்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது.
இப்போது, மேற்கண்ட மூன்று விவரங்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் பற்றி நாம் அலசப்போவதில்லை. ஆனால், முதல் பாகத்தைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
முதல் பாகத்தை பீஜே அவர்கள் கீழ்கண்டவிதமாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்:
"யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)?"
3) அறைகுறை வாக்கியம்:
இந்த வசனத்தில் முதல் பாகத்தில் ஒரு தீயவனை பற்றி பேசி, அவனை நல்லவவோடு/நல்லவற்றோடு ஒப்பிட்டு வாக்கியத்தை முடிக்கவேண்டும். ஆனால், அல்லாஹ் முதல் வாக்கியத்தில் பாதியை அடைந்தவுடன், நல்லவனை ஒப்பிட்டு பேசுவதை மறந்துவிட்டார். இதனால், வாக்கியத்தை "அவனா?" என்ற வார்த்தையோடு அறைகுறையாக விட்டுவிட்டு, "தான் நாடியோரை நல்லவழியில் செலுத்துவார்..." என்ற வாக்கியத்தை ஆரம்பித்துவிட்டார்.
இதனால் மொழியாக்கம் செய்பவர்கள் அல்லாஹ் செய்த பிழையை சரி செய்கிறார்கள். அல்லாஹ் சொல்ல தவறிய விவரத்தை இவர்கள் மொழியாக்கத்தில் சேர்கிறார்கள்.
இந்த வசனத்தில் பீஜே சேர்த்த "(சொர்க்கவாசி)" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வாசியுங்கள். இந்த வாக்கியம் அறைகுறையாக முழுமையடையாமலிருப்பதை காணலாம்.
குர்ஆன் 35:8
யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா?
தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான்.
(முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)
பீஜே அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையில் இருக்கும் பிழையை "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை அடைப்பிற்குள் எழுதி, வாக்கியத்தை முழுமை படுத்தினார்.
பீஜே "(சொர்க்கவாசி)?" என்று சேர்க்கவில்லையானால், அந்த வசனம் "அவனா?...." என்பதோடு நின்றுவிடும். அவ்வாக்கியத்திற்கு பொருள் இருக்காது அல்லது அறைகுறையான வாக்கியமாக இருக்கும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய பீஜே அவர்கள் "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை சேர்த்தார். இதே போல தமிழில் குர்ஆனை மொழியாக்கம் செய்த இதர இஸ்லாமிய அறிஞர்கள் இந்த குர்ஆனின் பிழையை எப்படி சரி செய்து, அல்லாஹ்விற்கு உதவினார்கள் என்பதை அவர்களின் மொழியாக்கங்களிலிருந்து குர்ஆன் 35:8ம் வசனத்தை இப்போது காண்போம்.
4) இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ்:
இந்த தமிழாக்கத்தை செய்தவர்கள், அல்லாஹ்வின் பிழையை சரி செய்ய "(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்று சேர்த்துள்ளார்கள். (பீஜே ஒரே வார்த்தையை பயன்படுத்தி சரி செய்துள்ளார்கள்). இவர்களும் தங்கள் வார்த்தைகளை அடைப்புகுறிக்குள் எழுதியுள்ளார்கள், ஏனென்றால், அந்த விளக்கம் குர்ஆனில் இல்லை.
எனவே எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாக காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாக காண்கிறாரோ அவரா?(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை அறிந்தவன்.
5) குர்ஆன் தர்ஜுமா, திரியெம் பிரிண்டர்ஸ்
இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)" என்று எழுதி குர்ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.
எனவே, எவனொருவனுடைய தீயசெயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை)அவனும் அழகானதாகவும் கண்டானே அவனா? (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை முற்றும் அறிந்தவன்.
6) தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன்
இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)" என்று எழுதி குர்ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.
எனவே எவனொருவன் அவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா?(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்).நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை வழிதவறச்செய்கிறான்.தான் நாடியவர்களை நேரான வழியில் நடத்துகிறான்.ஆகவே (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தோனாக இருக்கின்றான்.
7) திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி)
இந்த தமிழாக்கத்தை தந்தவர்கள், சிறிது மாற்றி "அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா? " என்று எழுதியுள்ளார்கள். மற்ற நல்ல மனிதனோடு ஒப்பிடாமல், பீஜேயைப் போன்று, எழுதியுள்ளார்கள். இவைகளை நாம் கவனித்தால், அல்லாஹ் பிழையாக செய்து வைத்துச் சென்றதை, ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும், தங்கள் சொந்த கருத்தை சொல்லி, அந்த குர்ஆன் பிழையை சரி செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.
எந்த மனிதனுக்கு அவனுடைய தீயச்செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக்கொண்டிருகின்றானோ(அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?) திண்ணமாக அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச்செலுத்துகிறான்.மேலும் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்.எனவே (நபியே)இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப் போய்விட வேண்டாம்.
8) திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்:
இவர்களின் குரானில் இது ஒன்பதாவது வசனம். பிஸ்மில்லாவையும் ஒரு வசனமாக கணக்கிட்டு எண்கள் போடப்பட்டுள்ளது. இது "அஹமதியா" என்ற இஸ்லாமிய பிரிவினரால் தமிழாக்கம் செய்யப்பட்ட குர்ஆன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் "(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)" என்று எழுதி அல்லாஹ்வின் பிழையை திருத்த முயற்சி செய்துள்ளார்கள்.
35:9 தனது செயலின் தீமை தனக்கு கவர்ச்சிமிக்கதாக ஆக்கப்பட்டு தானும் அதனை அழகானதென்று காண்பவன் (நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்புபவனை வழிக்கேட்டில் செல்ல விடுகிறான்.தான் விரும்புபவனை நேர்வழியில் நடத்துகின்றான்.எனவே அவர்களுக்காக வருந்தி உமது உயிர் அழிந்துவிட வேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு அறிபவனாவான்.
9) மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது:
இந்த குர்ஆன் சௌதியில் உள்ள மதினாவில் அரசாங்கத்தால் பதிக்கப்படுகிற குர்ஆன் தமிழாக்கமாகும். இதில் கூட அடைப்பிற்குள் "(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்ற வார்த்தைகளை சேர்த்து அல்லாஹ்வின் அறியாமையை போக்கியுள்ளார்கள்.
எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கிறாரோ அவரா? (இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான்; தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான்; ஆகவே, (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்; நிச்சயமாக , அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்
10) சங்கைமிகு குர்ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
இந்த மொழிப்பெயர்ப்பாளர், கொஞ்சம் வார்த்தைகளை தாரளமாகவே பயன்படுத்தியுள்ளார். அதாவது " (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)" என்று எழுதியுள்ளார். அதாவது 'அல்லாஹ் கேள்வி கேட்பது போல' வசனம் உள்ளது, அதில் முதல் பாகத்தில் பாதி கேள்வியோடு அல்லாஹ் விட்டுவிட்டார், ஆனால், இந்த மொழிப்பெயர்ப்பாளர், அல்லாஹ்வின் கேள்வியை பூர்த்தி செய்து, அதற்கான பதிலையும் தானே கொடுத்து காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார்.
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
11) முஹம்மது ஜான் தமிழாக்கம்
இந்த தமிழாக்கத்தில் "(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)" என்று எழுதி வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள்.
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ, அவன் (நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்படவேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
12) ஒன்பது தமிழ் குர்ஆன் மொழியாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்:
இதுவரை நாம் ஒன்பது தமிழ் குர்ஆன்களிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளோம். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை சொல்லியுள்ளார்கள். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை அடைப்புகுறிக்குள் கொடுத்துள்ளார்கள். இவர்கள் எல்லாருக்கும் அரபியில் உள்ள வசனத்தின் பிழை தெரிந்துள்ளது, அதனை சரி செய்ய, பிழையான அறைகுறை வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் முயன்றுள்ளார்கள்.
இந்த ஒன்பது பேர் அடைப்பிற்குள் எவைகளை சேர்த்து பிழையான வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவனை சுருக்கமாக காட்டும்:
| எண் | தமிழாக்கம் | பிழையை திருத்துவதற்கு சேர்க்கப்பட்ட வார்த்தைகள் |
| 1, | பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம் | (சொர்க்கவாசி)? |
| 2. | இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ் | (இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?) |
| 3. | குர்ஆன் தர்ஜுமா,திரியெம் பிரிண்டர்ஸ் | (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?) |
| 4. | தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன் | (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்) |
| 5. | திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி) | அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா? |
| 6. | திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட் | (நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?) |
| 7. | மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது | (இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?) |
| 8. | சங்கைமிகு குர்ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம் | (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) |
| 9. | முஹம்மது ஜான் தமிழாக்கம் | (நேர் வழி பெற்றவனைப் போலாவானா?) |
நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளபடி, குர்ஆன் தமிழாக்கத்தில் இவர்கள் புதிதாக சேர்த்த வார்த்தைகள், ஏற்கனவே இருக்கும் அரபி வார்த்தைகளுக்கு அதிகபடியான விளக்கம் தருவதற்காக அல்ல, அதற்கு மாறாக, பிழையாக உள்ள வாக்கியத்தில் அல்லது அறைகுறையாக விடுபட்ட வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் எடுத்த முயற்சி தான் இந்த குறிப்பிட்ட (35:8) வசனத்தின் இடையில் போடப்பட்ட மேற்கண்ட வார்த்தைகளாகும். ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும் தனக்கு தோன்றியபடி, விளக்கம் கொடுத்துள்ளார்கள். எல்லாருடைய விளக்கமும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை கவனிக்கவும்.
முடிவுரை:
பீஜே கூறுவது போல குர்ஆன் ஒரு பிழையற்ற வேதமல்ல. அல்லாஹ் செய்த பிழையை மனிதன் திருத்தும்படி அல்லாஹ் தம் வேதத்தை விட்டுவிட்டார். இது ஒன்று மட்டுமல்ல இது போல அனேக பிழைகள், இலக்கண பிழைகள் குர்ஆனில் (மூல குர்ஆனில்) உண்டு. கர்த்தருக்கு சித்தமானால் நாம் அவைகளை பிறகு காண்போம்.
குர்ஆன் பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்:
1) வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
2) ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?!
3) குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்
4) குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
5) பல விதமான அரபி குர்ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)
6) ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்ஆன் 2:238 முழுமையானதல்ல
7) விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்ஆனில் இல்லை ஏன்?
8) இன்றைய குர்ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
9) அரபி குர்ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?
சமர்கண்ட் மூல குர்ஆன் (MSSவுடன்) இன்றைய குர்ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு
10) பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1)
11) பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2)
12) பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3)
13) பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)
--
9/12/2011 11:06:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Fwd: ஜாவித் அவர்களுக்கு, 9/11 நாளின் 10ம் ஆண்டு வாழ்த்துக்கள் - நக்கலாக எழுதும் நல்லவர்கள்
--
9/11/2011 11:03:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது





